புதன், 17 டிசம்பர், 2014

பெண்ணொருவர் வெட்டிக் கொலை

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் தும்மசூரிய - பிபிலாதெனிய விஹாரைக்கு அருகில்  வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 12 வயதான பெண் பிள்ளை, 6 மற்றும் 3 வயதான இரு ஆண் பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். 

சம்பவத்தில் பிபிலாதெனிய பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் கணவர் அவரை விட்டுச் சென்றுள்ளதாகவும், பின்னர் தனியாக வாழ்ந்த அவரிடம் சில ஆண்களுக்கு தொடர்பிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

நேற்று மாலை அவர் தனது மகளுடன் சென்று கொண்டிருந்த வேளை மறைந்திருந்த இருவர் அவரைத் தாக்கியுள்ளனர், இதன்போது மகள் அவரை காப்பாற்ற முயற்சித்து குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். 

எனினும் வெட்டுக்காயத்திற்கு இலக்காக குறித்த பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

சடலம் குறித்த பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ள குறியாப்பிட்டிய நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்ட நீதவான், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கு குறிப்பிட்டார். 

தும்மலசூரிய பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



சனி, 6 டிசம்பர், 2014

பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!


யாழ்ப்பாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய ரொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதேவேளை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்தியாலங்கார யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்திற்கு அமைய அரச அதிகாரிகள் எவருக்கும் இடமாற்றங்களை வழங்க முடியாது. இந்த நிலையில், தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 20 நவம்பர், 2014

இலங்கை காவல்துறை அதிகாரி! கைது!

முல்லைதீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் மனைவி மற்றும் கணவனென இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட முல்லைதீவு காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரியொருவர் உள்ளிட்ட நால்வர் வவுனியா சோதனை சாவடியில் வைத்து கைதாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்... தம்பி என்றழைக்கப்படும் இ.சந்திரரூபன்(வயது 37) முல்லைதீவிலுள்ள பிரபல கட்டட ஒப்பந்தகாரர் ஆவார். தனது ஒப்பந்த வேலைக்கென வங்கியில் எடுத்து வந்திருந்த 20 இலட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டில் அவரது பணியாளர்களான நால்வரும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை நால்வர் கொண்ட கொள்ளைக்கும்பலொன்று பணியாளர்களைத் தாக்கி கைகால்களினை கட்டிப்போட்டுவிட்டு வீட்டை உடைத்து கொள்ளையிட முற்பட்டுள்ளது. அதனை தடுக்க முற்பட்ட அவரது மனைவியையும் அவரையும் வாள்களால் வெட்டி படுகாயமாக்கிவிட்டு அங்கிருந்த 20 இலட்சம் பணம் மற்றும் 13 பவுண் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. எனினும் கொள்ளையர்களுள் ஒருவரை முல்லைதீவு காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரியென அவர் அடையாளம் கண்டுகொண்டுள்ளார். அவர் வழங்கிய தகவலையடுத்து மோப்பநாய் சகிதம் நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த காவல்துறை அதிகாரியினை தேடி நாயும் காவல்நிலையம் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த காவல்துறை அதிகாரி தெற்கிற்கு தப்பியோட முற்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் வைத்து கைதாகியுள்ளார். எனினும் அவருடன் கைதான எஞ்சிய மூவரும் காவல்துறையினை சேர்ந்தவர்களா இல்லையா என்பதை அறியமுடியவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 16 நவம்பர், 2014

கடற்படைப்படகு! கட்டுமரத்தை மோதிச் சேதப்படுத்தியது



பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில் கட்டுமரம் ஒன்று துண்டுதுண்டாக உடைந்தது. இதில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். கற்கோவளம் கரையிலிருந்து 400 மீற்றர் தொலைவில் கட்டுமரம் ஒன்றில் இரண்டு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த கடற்படைப் படகு கட்டுமரம் மீது மோதியதில் கட்டுமரம் உடைந்து சேதமானது. மீனவர்களின் பெறுமதியான வலைகள் மற்றும் உபகரணங்களும் கடலில் மூழ்கின. உடைந்த கட்டுமரத் துண்டுகளைப் பிடித்தவாறு மீனவர்கள் நீந்திக் கரைசேர்ந்தனர். இது தொடர்பாக கற்கோவளம் கடற்றொழிலாளர் சங்கத்தில் மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 30 அக்டோபர், 2014

மஹிந்தவின் பேருந்துகள் இரண்டு மீது தாக்குதல்!

 வன்னியில்  மஹிந்தவினால் வழங்கப்பட்ட பேருந்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மேலும் இருவேறு பேருந்துகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் நேற்று புதன்கிழமை (29) இரவு கல்வீச்சு தாக்குதல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் முல்லைத்தீவு தண்ணீறூற்று பகுதிகளில் வைத்து இத்தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வழியாக கொழும்பு சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்; பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றுக்கும்; நேற்றிரவு இரவு தண்ணீரூற்று பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கற்பிட்டி இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துக்கே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி பேருந்தைச் செலுத்தி வரும்போது தண்ணீரூற்று பிரதேசத்தில் வைத்து இரு உந்துருளியில் வந்தவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 25 அக்டோபர், 2014

முன்பள்ளிக்குச் சென்ற ஆறு வயது சிறுவன் சடலமாக மீட்பு

 யாழில் ஆறு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிரேசியன் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குறித்த சிறுவன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள முன்பள்ளிக்குச் சென்றுள்ளார். 12 மணியான போதும் பிள்ளையை காணவில்லை என பெற்றோர்கள் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரம் பல பகுதிகளில் தேடிய பின்னர் முன்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக மிதந்துள்ளார்.
தற்போது, சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 அக்டோபர், 2014

இராணுவம்! துரத்தி துரத்தி வீதியெங்கும் வாழ்த்து கூறுகின்றனர்??

யாழ்.குடாநாட்டு மக்களிற்கு இலங்கை இராணுவம் வீதியெங்கும் துரத்தி துரத்தித் தீபாவளி வாழ்த்து கூறி வருகின்றது. வீதியில் ரோந்து செல்லும் படைப்பிரிவுகள் ஒருபுறமும் மற்றைய புறம் வீடுவீடாக செல்லும் படையினர் இன்னொருபுறமும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மற்றும் இராணுவத்தினரின் தீபாவளி வாழ்த்து என அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளையே இவ்வாறு வழங்கி வருகின்றனர். யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் பரவலாக கடந்த மூன்று நாட்களாக இராணுவத்தினர் அமோகமாக வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
அத்துடன் தீபாவளியை முன்னிட்டு படையினர் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்வுகளையும் நடத்தவிருப்பதாகவும் அழைப்பிதழ்களினில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளிற்காகவே வீடு வருவதாக அச்சங்கொண்டு மக்கள் முடங்கிவருகின்றனர். மக்களது மனம் கவரும் நோக்கினிலேயே இம்முயற்சி நடப்பதாக கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 அக்டோபர், 2014

பருத்திதுறையிலிருந்து கொக்கிளாய்க்கான நேரடி பஸ் சேவை

பருத்திதுறையிலிருந்து  கொக்கிளாய்க்கான நேரடி பஸ் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது பஸ் சேவை இன்று அதிகாலை 5.15 க்கு ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி தெரிவிக்கின்றார்.
அதற்கமைய தினந்தோறும் அதிகாலை 5.15 க்கும் காலை 10.30 க்கும் இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக் காரணமாக பருத்திதுறையிலிருந்து முல்லைத்தீவுக்கான பஸ் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்ததாகவும் பருத்திதுறை சாலை முகாமையாளர் கூறினார்.
பின்னர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குடாநாட்டு மக்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளவதை கருத்திற் கொண்டு நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும் பருத்திதுறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி  சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முல்லைத்தீவு கொக்கிலாய் பஸ் நிலையத்திலிருந்து பருத்திதுறைக்கான நேரடி பஸ் சேவை பிற்பகல் ஒரு மணிக்கும் மாலை நான்கு மணிக்கும் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 அக்டோபர், 2014

சிறைக்கைதி ஒருவர் மரத்தில் இருந்து விழுந்து மரணம்!

 மட்டக்களப்பில் சிறைக்கைதி ஒருவர் மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
நீதிமன்ற வளாகத்திலுள்ள மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று மாலை 3.20 அளவில் குறித்த கைதி, வழுக்கி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
விழுந்ததில் படுகாயமடைந்த கைதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

சிறைக்கைதிகளுக்கு இன்று முதல் தொலைப்பேசி!

சிறைக்கைதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைப்பேசி மத்திய நிலையாம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது.
சமூகத்துடனும் குடும்பத்துடனுமான சிறைக்கைதிகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகள் வரலாற்றில் முதற்தடவையாக தொலைபேசி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரசேன பல்லேகமவின் தமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால்  திறந்து வைக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 11 அக்டோபர், 2014

இலங்கையை ஹெலிகொப்டரில் சுற்றிப் பார்க்கலாம்

இனி இலங்கையை ஹெலிகொப்டரில் சுற்றிப் பார்க்கலாம்
சிவில் ஹெலிகொப்டர் சேவையொன்றை அடுத்த வாரத்துக்குள் ஆரம்பிப்பதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரையறுக்கப்பட்ட ஐ.டபிள்யு.எஸ். எவ்யேஷன் தனியார் கம்பனிக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த கம்பனியின் தலைவர் ஐ.டபிள்யு. சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா, உள்நாட்டு விஜயம், வானியல் ஆய்வுகள், ஆகாயத்திலிருந்து புகைப்படம் எடுத்தல், திரைப்படம் தயாரிப்பு, சிவில் விமான நிலையங்களுக்கிடையிலான சேவை, விளையாட்டு மற்றும் செய்தி பெறுவதற்கான அவசர கள விஜயங்கள் என்பவற்றுக்கு இந்த குளிரூட்டப்பட்ட ஹெலிகொப்டர் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இரத்மலான விமான நிலையத்திலிருந்து இந்த சேவை முன்னெடுக்கப்படும் எனவும் அக் கம்பனியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 4 அக்டோபர், 2014

புங்கன்குளம் பகுதியில் காணியில் கைக்குண்டு மீட்பு!

டெங்கு பரவலை தடுக்க துப்பரவு பணியினை மேற்கொண்ட போது, வீட்டு காணியில் இருந்து பழைய கைக்குண்டு ஒன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். புங்கன்குளம் புகையிரத பாதைக்கு அண்மையில் உள்ள வீட்டு காணியினை வீட்டு பராமரிப்பவர்கள் புதன்கிழமை துப்பரவு பணியினை மேற்கொண்ட போது, கிளிப் கழற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று இருந்துள்ளது.
வீட்டு பராமரிப்பாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து, இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் குண்டை செயலிழக்க வைத்துள்ளனர்
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 3 அக்டோபர், 2014

புதையல் தோண்டிய மூவர் கைது

வவுனியா, மாமடுவ வாவி பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் இன்று  அதிகாலை மாமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, போகஸ்வெவ வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அநுராதபுரம், கல்கிரியாகம மற்றும் கெக்கிராவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டமை சார்பாக விசாரணையை ??

வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டமை சார்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
கல்குடா கல்வி வலயதுக்குட்பட்ட வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் செல்வராஜா வரதன் (வயது 09) என்னும் 4ம் ஆண்டு கல்வி கற்பவன். கடந்த 2014.09.23ம் திகதி அன்று பாடசாலையில் வைத்து அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஜனாப்.என்.எம்.நசீர் என்பவரால் தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதி சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிகின்றேன்.
இத்தாக்குதலை மேற்கொண்ட ஆசிரியர் சார்பாக நியாயமான நடவடிக்கைகள் நடைபெற்றதாக தகவல் கிடைக்கவில்லை. எனவே உரிய முறையில் விசாரணையை மேற்கொண்டு இச் சிறுவனுக்கு துன்பம் விளைவித்த இவ்ஆசிரியர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருமாறு வேண்டுகின்றேன். தங்கள் நடவடிக்கை சார்பாக பதிலை எதிர்பார்க்கின்றேன் என இவ் மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரதிகள் வாழைச்சேனை கல்குடா வலய வலயக் கல்விப் பணிப்பாளர், வாழைச்சேனை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி, வாழைச்சேனை பொலிஸ் நிலையம் பொலிஸ் பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு மாவட்ட டி.ஐ.ஜி, வாழைச்சேனை ஏ.எஸ்.பி. ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 24 செப்டம்பர், 2014

தீ: விபத்தில் 18 கடைகள் நாசம்

மாவனெல்லை நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

நாகேந்திரபுரம் பகுதியில் வாகன விபத்து! ஒருவர் பலி

 
 கிளிநொச்சி புளியம்பொக்கனை – நாகேந்திரபுரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார். இந்த  விபத்து நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிறியரக வானொன்றும், வைக்கோல் ஏற்றிய லொறியொன்றும் பாதசாரியை மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி  வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்செய்தி வெளிவரும் வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 20 செப்டம்பர், 2014

பதற்றம்! இரு அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மோதல்

 பதுளை - சோரணதோட பிரதேசத்தில் இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு இடையிலேயே, இன்று காலை 8.00 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 10 செப்டம்பர், 2014

விஜய் முருகதாஸ் மோதல்? கத்திக்கு மேலும் சிக்கல்?


கத்தி இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் கத்தி படத்திற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது கத்தி படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஆரம்பமான நாள் முதல் இன்றுவரை பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தது.
இந்நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
பேசிக்கொள்ளாத விஜய் முருகதாஸ்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் கத்தி படத்தின் படப்பிடிப்பு நடந்ததாம். அப்போது படப்பிடிப்புக்கு வந்த முருகதாஸும், விஜய்யும் அருகருகே உட்கார்ந்திருந்த போதும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லையாம்.
உதவியாளர்கள் உதவியால்
அன்றைய தினம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லையாம். இதனால் அன்றைய தினம் எடுக்கவிருக்கும் காட்சிகளை முருகதாஸ் தனது உதவியாளர்களிடம் கூற உதவியாளர்கள் விஜய்யிடம் காட்சியை விளக்கினர்.
உருவான சிக்கல்
விஜய்யும் இயக்குநர் முருகதாஸும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்ததால் படக்குழுவினர் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று முருகதாஸின் உதவியாளர்களுக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
மாமனாருக்கு சிக்கல்
கத்தி படத்தின் தயாரிப்பாளர் பிரச்சனையால் லண்டனில் இருக்கும் விஜய்யின் மாமனாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முருகதாஸ் மீது அதிருப்தி
தயாரிப்பாளர் இவ்வளவு வில்லங்கமானவர் என்பதை முருகதாஸ் தன்னிடம் திட்டமிட்டே மறைத்ததாக விஜய் நினைப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப் படுகின்றன. இதனால் விஜய்க்கு முருகதாஸ் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலவச விளம்பரம்
மேலும் கத்தி படத்திற்கு ஊடகங்களிடம் இருந்து இலவச விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக படத்தின் தயாரிப்பாளர் குறித்த ரகசியங்களை முருகதாஸ் வேண்டுமென்றே கசியவிட்டதாகவும், அது தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.
மருத்துவமனையில் அனுமதி
இப்படி கத்தி படத்திற்கு மாற்றி மாற்றி ஏற்பட்ட சிக்கல்தான் முருகதாஸ்க்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்திவிட்டது என்றும் கூறுகின்றனர். இதுகுறித்து முருகாதாஸின் பிஆர்ஓ ரியாஸிடம் கேட்ட போது, அஜீரணக் கோளாறு காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வீதிக்கட்டுப்பாடு நவற்கிரி கோர விபத்தினை அடுத்து !!

  யாழ்.குடாநாட்டின் சிறு வீதிகளின் ஊடாக கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட விரைவில் தடை விதிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவுள்ளது.யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன இதனை தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் :-
அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துச் செல்கின்றது இதனால் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாரினால் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக  நவக்கிரி  புத்தூர்ரில் வியாழக்கிழமை 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் மகேஸ்வரி நிதியத்துக்குச் சொந்தமான டிப்பரால் மோதிக் கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த வீதியில் குறித்த டிப்பர் வாகனம் செல்ல முடியாதவாறு நிலத்தின் தன்மை, அகலம் காணப்பட்டபோதும் டிப்பர் வாகனம் பயணித்துள்ளது. இவ் வீதி உட்பட யாழ். குடாநாட்டில் உள்ள சிறு வீதிகளில் செல்லக்கூடிய அல்லது செல்ல அனுமதிக்கக்கூடியதான நிலத்தின் தாங்குதிறன், வீதியின் அகலம் என்பனவற்றைக் குறிப்பிட்டுப் பாரவூர்திகள் செல்ல அனுமதிக்கப்படும் வகைகள் தொடர்பில் அறிவித்தல் பலகை போடப்பட்டிருக்கவில்லை.

அந்த அறிவித்தல் வீதியில் போடப்பட்டிருந்தால் அவ்வாறான விபத்துகளைத் தடுக்க முடியும் என்று கூறப்பட்டது.

இதனடிப்படையிலேயே சிறு வீதிகள் மற்றும் ஒழுங்ககைள் ஊடாக கனரக வாகனங்கள் பயணிப்பது தடைசெய்யப்படவுள்ளது. இதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து இது குறித்த எச்சரிக்கைப் பலகைகள் உரிய வீதிகளில் நடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
... இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

துரையப்பா அரங்கு அடிக்கல் நாட்டப்பட்டது.!


யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தை, சர்வதேச அரங்காகப் புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு 27.08.14.முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இந்தியத் துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, , கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விளையாட்டு அரங்குக்கான அடிக்கல்லை நட்டுவைத்தனர். இலங்கை - இந்திய நட்புறவின் கீழ், இந்திய அரசாங்கமும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து 145 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்
.
adikkal adikkal0

சனி, 23 ஆகஸ்ட், 2014

தாலிகட்டியதும் மனைவியை பிரிந்தார் கடல் கடந்து காதல் வென்றது:

 இலங்கை வாலிபர்  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனிசிறப்பு முகாமில் இந்தியாவில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வங்காள தேசத்தை சேர்ந்த 6 பேர், நைஜீரியர்கள் 6 பேர், 22 இலங்கை வாழ் தமிழர்கள் உள்பட 34 பேர் 1946 மத்திய தடை சட்டம் 31–ன் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கையை சேர்ந்த செல்வராஜா என்பவரின் மகன் கிருஷ்ணலிங்கம்(வயது 35) என்பவரும் உள்ளார். இவர் கடந்த 2009–ம் ஆண்டு 5 வழக்குகளில் செங்கல்பட்டு தனிசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு தற்போது செய்யாறு தனிசிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணலிங்கம், இலங்கையில் உள்ள அவருடைய மாமன் மோகனவேல் என்பவரின் மகள் வசந்தமலர் (32) என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். வசந்தமலரை திருமணம் செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழக அரசிடம் கிருஷ்ணலிங்கம் மனு செய்திருந்தார். இதற்கு அரசு அனுமதி அளித்தது.
அதனை தொடர்ந்து வசந்தமலர் மற்றும் உறவினர்கள் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் தங்கினார். நேற்று செய்யாறு தனிசிறப்பு முகாமில் உள்ள கிருஷ்ணலிங்கத்தை அரசின் அனுமதியுடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அங்கு வசந்தமலர் மணக்கோலத்தில் காத்திருந்தார். கிருஷ்ணலிங்கம் வந்ததும் உறவினர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
வசந்தமலர் கழுத்தில், கிருஷ்ணலிங்கம் உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டினார். தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து 1 மணிநேரத்தில் மீண்டும் கிருஷ்ணலிங்கம் தனிசிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பின்னர் மணமகள் மற்றும் உறவினர்கள் சென்னை பல்லாவரத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
தாலிகட்டியவுடன் பிரிந்தாலும் காதலில் வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க தம்பதி பிரிந்து சென்ற காட்சி உருக்கமாக இருந்தது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

வியாழன், 31 ஜூலை, 2014

குறைந்த விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட் பேண்ட் (காணொளி )

 
Razer நிறுவனம் தனது Razer Nabu எனும் புதிய ஸ்மார்ட் பேண்ட்டினை எதிர்வரும் இரு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.
முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இதன் விலை 100 டொலர்கள் என Razer நிறுவனத்தின் தலைமை அதிகாரி Min-Liang Tan தெரிவித்துள்ளார்.
Android மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய இச்சாதனத்தில் Twitter, Google Maps, Instagram மற்றும் Facebook அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.
128 x 32 Pixel Resoluton உடையதும் OLED தொழில்நுட்பத்தினை உடையதுமான திரையினைக் கொண்டுள்ளது.
இதிலுள்ள மின்கலமானது ஒருமுறை சார்ஜ் செய்த பின்னர் 5 தொடக்கம் 7 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

மற்றைய செய்திகள்

திங்கள், 28 ஜூலை, 2014

தற்பரன் அவர்களின் 31வது நாள் நனைவையொட்டி நடத்தப்பட்ட

அமரர் சுப்பிரமணியம் தற்பரன் அவர்களின் 31வது நாள் நனைவையொட்டி நடத்தப்பட்ட துடுப்பாட்ட இறுதியாட்டத்தில் அச்சுவேலிகதிரொளி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நவற்கிரி எல்லாளன் வி.கழகம் மோதிக்கொண்டது அதில் கதிரொளிவி.கழகம் 31ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக்கொண்டது இதில் தொடர் நாயகனும்.அதிககூடிய ஓட்டத்தையும் விதுசன் பெற்றுக்கொண்டார் இறுதியாட்டத்தின் ஆட்டநாயகனாக கதிரொளிவி.கழகவீரராக மதுசன் தெரிவுசெய்யப்பட்டார்



 
மற்றைய செய்திகள்

திங்கள், 21 ஜூலை, 2014

இராச வீதி அச்சுவேலியில் பதற்றம்

அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
மேற்படி பகுதியில் 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 53 பரப்புத் தோட்டக் காணிகள் கடந்த ஜுன் 2ஆம் திகதி நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு செய்ய முற்பட்ட போது, அதனை பொதுமக்கள் போராட்டம் நடத்தித் தடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை (21) பொலிஸாரின் பாதுகாப்புடன் மீண்டும் காணிகளை அளவீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு கூடிய பொதுமக்கள், வடமாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அங்கு வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, இந்தக் காணிச் சுவீகரிப்பிற்கு எதிராக தாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவ்வாறானதொரு நிலையில், இந்த காணிகளை அளவீடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் கூறினர்.
அதற்கு பொறுப்பதிகாரி, நீதிமன்ற உத்தரவினை கையளிக்கும்படி கோரியுள்ளார்.  நீதிமன்ற வழக்கு இலக்கம் மட்டுமே உள்ளது, நீதிமன்ற உத்தரவு இன்னமும் கிடைக்கப்பெறவில்லையென பொதுமக்கள் பதில் கூறினார்கள்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காணி அளவீடு செய்வதினைத் தடை செய்ய முடியாது. நாங்கள் காணி அளவீடு செய்வதற்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
எங்களைக் கைது செய்த பின்னரே நீங்கள் காணிகளை அளவீடு செய்ய முடியும் என பொதுமக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர், நிலஅளவையாளர்கள் வந்த வாகனத்தினை சுற்றி அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் ஆகியோரும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்

மற்றைய செய்திகள்

சனி, 5 ஜூலை, 2014

வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு;

 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயார் பிரிவிற்குள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.

அல்லாரைப்பகுதியில் இரண்டு குழுக்களுக்குள் இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

அதனையடுத்து குறித்த குழுவினர் வைத்தியசாலைக்குள் வந்து மீண்டும் தகராற்றில் ஈடுபட்டனர். இதனையடுத்த மீண்டும் வாள் வெட்டு இடம்பெற்றது. இதில் 8பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்போது அல்லாரையை சேர்ந்த 25வயதுடைய அன்பழகன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் வழியில். உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றமையால் வைத்தியசாலையினர் பீதியில் உறைந்துள்ளதுடன் வைத்தியசாலை சூழல் பதட்டநிலையிலும் உள்ளது. தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றைய செய்திகள்

மரண அறிவித்தல்.இராசையா நவரத்தினராஜா

மலர்வு,26.09.48.        உதிர்வு.05.07.14.
பிறந்தஇடம்  பத்தைமேனி  வாழ்ந்த:இடங்கள்  சிறுப்பிட்டி .சுவிஸ்.so.
அச்சுவேலி பத்தைமேனியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை (மடத்தடி ஒழுங்கை) வதிவடமாகவும் கொண்ட இராசையா நவரத்தினராஜா நேற்று (05.07.2014) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் இராசையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும், பாலசிங்கம் பொன்னம்மா தம்பதியரின் மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சோபனா, பிரதீபா (நியூசிலாந்து), மதுரா ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகலிங்கம், (பலநோக்குக் கூட்டுறவு சங்கம்அச்சுவேலி), ஜெயசீலன் (நியூசிலாந்து) ஆகியோரின் மாமனும், கனகரஞ்சிதம், காலஞ்சென்ற சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், இராசதுரை சந்திராதேவி, கோபாலகிர்ணன், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் மைத்துனரும், கணேஸ்குமார், சசிக்குமார், கிருஸ்ணகுமார், குமார், சுகந்தினி, யோதினி, துஷ்யந்தன், கமலதாசன், சஜீவன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனும், நிவேதிகா (வேம்படி மகளீர் தேசிய பாடசாலை), கபிஸ்னா (யா/இந்து ஆரம்ப பாடசாலை), ஷாய்சரன், ஆகாஸ், ஆருஷா (நியூசிலாந்து) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : கோ. யோகலிங்கம் (மருமகன்) (பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி) 
தொடர்புகளுக்கு  
கோ. யோகலிங்கம் (மருமகன்) (பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் அச்சுவேலி)

அன்னாரின் பிரிவால் வாடும்
அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைதெரிவிக்கின்றோம்

புதன், 25 ஜூன், 2014

பிறந்தநாள் வாழ்த்து: பாலச்சந்தி​ரன்(25.06.14)

 
நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் உதயநாதன் பாலச்சந்தி​ரன் தனது 29வது  பிறந்தநாளை கொண்டாடுகி​றார். இவரை அம்மா,தங்கை,அம்மம்மா,ம​ற்றும் நவற்கிரி விசயன்  குடும்பத்தி​னரும்,ஊர் நண்பர்களும்​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன்  பிரான்சில் வசிக்கும் சிவகுமார் குடும்பத்தி​னரும்,நண்ப​ன் மதுசன் ஆகியோரும் வாழ்த்துகி​ன்றனர்.இன் நன்னாளில்உற்றார்.உறவினர்களுடன்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும்  பாலச்சந்தி​ரனை புதிதாய் பிறக்கும் வருடம் மனதை இதமாய் வருடும் மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு   வாழ்வில் வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றோம்



 
 

சனி, 14 ஜூன், 2014

பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் கெவின்(14.06.2014)


 சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும் அருண் தம்பதிகளின் செல்வப்புதல்வன் கெவின் அவர்களின் இரண்டாவது  பிறந்தநாள் இன்று .இவரை அன்பு பெற்றோர்  சகோதரிகள்  உறவினர்கள் குடும்ப உறவுகள் மற்றும் .உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நன்னாள்.இரண்டாவது பிறந்தநாள் காணும் கெவினை சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்துகின்றது. 


புதன், 4 ஜூன், 2014

ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு இந்தியாவில் ஆய்வு!

 
 லண்டன்: மாம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய யூனியனை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற மாம்பழங்களான அல்போன்சா போன்ற மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இந்த தடை 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என அறிவித்தது.
இதன் காரணமாக ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 28 நாடுகளுக்கு மாம்பழ ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இறக்குமதியான இந்திய மாம்பழங்களில் 6 சதவிகிதம் வரை பழவண்டு மற்றும் பூச்சித் தாக்குதல் இருந்ததாக ஐரோப்பிய யூனியன் சுகாதார மையம் அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது.
மாம்பழ சீசன் தொடங்கும் நேரத்தில் இறக்குமதியாளர்களிடம் ஆலோசிக்காமல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம், சவுதி அரேபியா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா ஆகியவை இந்திய மாம்பழங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. உலக மாம்பழ உற்பத்தியில் இந்தியா 40 சதவிகித பங்குடன் முதலிடத்தில் இருக்கிறது.
இந்திய வர்த்தகதுறை அமைச்சகம் சார்பில் தடைக்கான விளக்கம் மற்றும் தடையை நீக்க உத்தரவிட கோரியும் கடிதம் எழுதப்பட்டும் எந்த பலனும் இல்லை.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த உயர் அதிகாரம் கொண்ட விஞ்ஞானிகள் குழு வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகிறது. மாம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆய்வு செய்து தடை நீக்க வழிவகை செய்வதற்காக வருகை தருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, புருசல்ஸ் கூட்டத்திலும் இதுகுறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கடந்த 1989ஆம் ஆண்டு அமெரிக்காவும் இது போன்ற தடையை விதித்து பின்னர் 2007ஆம் ஆண்டு தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
 
 : 
:

 

சனி, 31 மே, 2014

அந்தியேட்டி கிரிகை அழைப்பிதழ் அமரர் திரு பாலசிங்கம் திலகவதி

                            
 தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014
                                                அமரர் :- பாலசிங்கம் திலகவதி
அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு திரு பாலசிங்கம் திலகவதி அவர்களின் அந்தியேட்டி கீரிமலை வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் எதிர்வரும்.03.06.2014 .செவ்வாய்கிழமை  கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் 05.06..2014  வியாழக்கிழமை  இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்கள் அனைவரும் வருகைதந்து அன்னாரின் ஆத்மாசாந்திப்பிரத்தனயிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நன்றி இங்கனம்..குடும்பத்தினர்
 
 


திங்கள், 26 மே, 2014

கடலில் மூழ்கி ஏறாவூர் இளைஞர் உயிரிழப்பு

 டுபாய் நாட்டுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காயர் வீதி றிபாய் பள்ளிவாசலடியைச் சேர்ந்த முஸ்தபா ஸஹீன் (வயது 21) என்பவர்  அங்குள்ள  கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தனது நண்பர்களுடனும் டுபாய் நாட்டில் தொழில் வாய்ப்புப் பெற்றிருக்கின்ற தனது  இரு சகோதரர்களுடனும் இணைந்து  ஞாயிற்றுக்கிழமை (25) கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இவருடன்  கடலில் நீராடிக்கொண்டிருந்தவர்கள் இவரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுத்தபோதும், அது கைகூடவில்லை எனவும்   உறவினர்கள் தெரிவித்தனர்.

டுபாயிலுள்ள வைத்தியசாலையொன்றில் தற்போது வைக்கப்பட்டுள்ள சடலத்தை  இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வருடகாலமாக இவரும் இவரது சகோதரர்கள் இருவரும் டுபாயில் தொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதன், 30 ஏப்ரல், 2014

வடபகுதிக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

குருநாகல், பொத்துஹெர பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, வடபகுதிக்கான தூர ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வவுனியா, பளை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கும்  மற்றும் மேற்படி பகுதிகளிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ரயில் சேவைகள் நாளை இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சனி, 26 ஏப்ரல், 2014

அதிசயம் இரு உடலில் ஒரு இதயம்

 ஆந்திர மாநிலத்தில் ஒரே இதயத்துடன் இரண்டு குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான மாரவள்ளி ஏர்ரய்யா – நூகாலம்மா என்ற தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்தன.
குழந்தையின் கழுத்து முதல் மார்பு பகுதி வரை ஒன்றாக ஒட்டி உள்ளன. 2 குழந்தைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இதயமே உள்ளது.
இந்த குழந்தைகள் உடனடியாக அங்குள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு வைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நூகாலம்மாவுக்கு ஏற்கனவே 2 முறை பிரசவம் நடந்த 2 குழந்தைகளும் இறந்து விட்டனர். இது 3வது பிரசவம் ஆகும். இந்த முறை குழந்தைகள் இப்படி பிறந்துள்ளதால் பெற்றோர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
 

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பிறந்தநாள் வாழ்த்து ராஜசசேகரம் மதுசன்.25.04.2014.

 
தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும்
ராஜசசேகரம் மதுசனின் பிறந்த நாள் இன்று.25.04.2014.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது  இல்லத்தில் வெகுவிமர்சையாகஇன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் தேவன் குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்{காணொளி ]


 

........