செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் வீட்டில் திருட்டு


மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் வீட்டில் 18ஆம் திகதி இரவு வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகளை 
கொள்ளையடித்து 
சென்றுள்ளதென சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், நகை மற்றும் பொருட்களை இவ்வாறு கொள்ளையடித்துச் 
சென்றுள்ளனர்.
இது தொடர்பில், குருக்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்மருதனார் மடம் ஆஞ்சநேயர் ஆலய குருக்கள் 
வீட்டில் 18ஆம் 
திகதி இரவு வாள்களுடன் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்துவர்களை மிரட்டி 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதென சுன்னாகம் 
பொலிஸார் தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 17 அக்டோபர், 2015

மரணஅறிவித்தல் திருமதி மரியா திரேசா ஞானப்பிரகாசம்

தோற்றம் : 23 மே 1938 — மறைவு : 13 ஒக்ரோபர் 2015
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மரியா திரேசா ஞானப்பிரகாசம் (இராசமலர்)அவர்கள் 13-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை மார்கிறெட்(மலர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மரியா அந்தோனியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சவரிமுத்து ஞானப்பிரகாசம்(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்றனட் சசிக்கலா(கனடா), Godfrey பிறையன்(அவுஸ்திரேலியா), ஏட்றியன்(ஞானி- கனடா), ஜுடித் சுச்சித்ரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அலோஷியஸ் அருமைத்துரை(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சண்முகராஜா(ஷன்- கனடா), அனுஷா(அவுஸ்திரேலியா), சறோ(கனடா), Dr.டிலிப்குமார் மேதர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, கேட்ரூட் புஷ்பம், பெனடிக்ற் ஜெயரட்னம் மற்றும் சற்குனம்(அவுஸ்திரேலியா), செல்வராணி(இங்கிலாந்து), கத்தரின்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

அபிஷேக், அஷ்வினி, பிரசன்னா, பிரஷாந்தி, பிரவீன், அரவிந்த், அஞ்சலி, அஷ்மிதா, கேஷினி, நிரோஷினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நவற்கிரி.கொம்   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தவர்க்கு எமது 
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/10/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/10/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 19/10/2015, 10:00 மு.ப
முகவரி: Prince of Peace 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada. 
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 19/10/2015, 12:00 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada. 
தொடர்புகளுக்கு
ஏட்றியன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19056401779
செல்லிடப்பேசி: +16478851778
சுச்சித்ரா(மகள்) — கனடா
தொலைபேசி: +19054773529
செல்லிடப்பேசி: +14169043529
பிறையன்(மகன்) — கனடா
தொலைபேசி: +161393083005
சசி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162890227

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 10 அக்டோபர், 2015

வலி வடக்கில் மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை திறப்பு

 வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் மூன்று கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
அரசாங்கத்தின் கிராமத்திற்கு பத்து லட்சம் ரூபா என்ற நிதித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களை, பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் திறந்து வைக்கவுள்ளார்.
அளவெட்டி வடக்கு ஜே 216, வீமன்காமம் ஜே 236, மற்றும் வறுத்தலைவிளான் ஜே.241 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் இந்த கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வுகளில் வலி. வடக்கு பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன், வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சயின் காகேசன்துறைத தொகுதி அமைப்பாளர் ஸ்ரீதாமோதரராசாவும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 5 அக்டோபர், 2015

வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில்

சுதுமலையில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு இளைஞர் படுகாயத்திறக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுதுமலை அம்மன்கோவில் பகுதயில் இரண்டு மோட்டார் சையிக்கிளில் வந்த நான்கு பேர் இந்த வாள் வெட்டை மேற்க் கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
சுதுமலை வடக்கு சுதுமலையைச்சேர்ந்த எஸ்.ஸ்ரீகிருஸணகுமார் வயது 26 என்ற இளைஞரே வெட்டுக்காயத்திறக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையின் 24 ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளவராகும்.
குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக மானிப்பாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 1 அக்டோபர், 2015

மூச்சுத்திணறி ஒன்றைரை மாதக்குழந்தை பரிதாபமாக உயிழப்பு

வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது.
நேற்றுப் பிற்பகல் 5.30 மணியளவில் தாயார் பிள்ளைக்கு
 பால் கொடுத்து தலையணையில் உறங்கவைத்துவிட்டு உடுப்பு துவைப்பதற்காகச் சென்றுள்ளார். பக்கத் தலையணைகள் இன்றி ஒரு தலையணையில் கிடத்தப்பட்ட பிள்ளை, தலை திரும்பி முகம் குப்புற கவிழ்ந்தமையால் அது மூச்சுச் திணறி உயிரிழந்துள்ளது.
 காந்தன் சந்தோஸ் என்ற ஒன்றரை மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளது. இரவு 7 மணியளவில் பிள்ளை வளர்த்தப்பட்ட இடத்துக்குச் சென்று பார்த்தபோது பிள்ளை குளிர்ந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு 
சென்ற போதிலும் வைத்தியர் ஏற்க மறுத்த நிலையில் பிள்ளையை அவசரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு பிள்ளை இறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்திய நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டு இன்று
 யாழ்ப்பாணம் 
நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரயையை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம்
 ஒப்படைக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>