வியாழன், 22 ஜனவரி, 2015

தேசிய பொங்கல் விழா மாணவர்கள் மத்தியில்??

இராதாகிருஷ்ணன் தலைமையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சமூக இணைக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக கல்வி அமைச்சின் தேசிய பொங்கல் விழா மஸ்கெலியாவில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வானது இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலை மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது உரையாற்றிய அமைச்சர், புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தில் ஆசிரியர் நியமனம் மற்றும் பல துறைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>