வன்னியில் மஹிந்தவினால் வழங்கப்பட்ட பேருந்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மேலும் இருவேறு பேருந்துகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் நேற்று புதன்கிழமை (29) இரவு கல்வீச்சு தாக்குதல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மற்றும் முல்லைத்தீவு தண்ணீறூற்று பகுதிகளில் வைத்து இத்தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வழியாக கொழும்பு சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்; பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றுக்கும்; நேற்றிரவு இரவு தண்ணீரூற்று பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கற்பிட்டி இடையில் சேவையில் ஈடுபடும் பேருந்துக்கே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி பேருந்தைச் செலுத்தி வரும்போது தண்ணீரூற்று பிரதேசத்தில் வைத்து இரு உந்துருளியில் வந்தவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.