சனி, 31 மே, 2014

அந்தியேட்டி கிரிகை அழைப்பிதழ் அமரர் திரு பாலசிங்கம் திலகவதி

                            
 தோற்றம் : 05.03. 1937 — மறைவு : 06.05. 2014
                                                அமரர் :- பாலசிங்கம் திலகவதி
அல்வாயை பிறப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு திரு பாலசிங்கம் திலகவதி அவர்களின் அந்தியேட்டி கீரிமலை வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் எதிர்வரும்.03.06.2014 .செவ்வாய்கிழமை  கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் 05.06..2014  வியாழக்கிழமை  இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்கள் அனைவரும் வருகைதந்து அன்னாரின் ஆத்மாசாந்திப்பிரத்தனயிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நன்றி இங்கனம்..குடும்பத்தினர்
 
 


திங்கள், 26 மே, 2014

கடலில் மூழ்கி ஏறாவூர் இளைஞர் உயிரிழப்பு

 டுபாய் நாட்டுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காயர் வீதி றிபாய் பள்ளிவாசலடியைச் சேர்ந்த முஸ்தபா ஸஹீன் (வயது 21) என்பவர்  அங்குள்ள  கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தனது நண்பர்களுடனும் டுபாய் நாட்டில் தொழில் வாய்ப்புப் பெற்றிருக்கின்ற தனது  இரு சகோதரர்களுடனும் இணைந்து  ஞாயிற்றுக்கிழமை (25) கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இவருடன்  கடலில் நீராடிக்கொண்டிருந்தவர்கள் இவரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுத்தபோதும், அது கைகூடவில்லை எனவும்   உறவினர்கள் தெரிவித்தனர்.

டுபாயிலுள்ள வைத்தியசாலையொன்றில் தற்போது வைக்கப்பட்டுள்ள சடலத்தை  இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வருடகாலமாக இவரும் இவரது சகோதரர்கள் இருவரும் டுபாயில் தொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.