வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய கேணியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்களான இரு இளைஞர்கள் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில்
ஆலய கேணியில்
குளிக்கச் சென்றுள்ளார்கள். மழைகாலம் என்பதால் ஆலய கேணி நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது. கேணியில் குளித்துக் கொண்டிருந்த இருவரும் நீரில் மூழ்குவதை ஆலயத்துக்கு வந்தவர்கள்
கண்டு மீட்டனர்.
அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார். உடனடியாக இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் மயக்கமுற்ற இளைஞர் தலையில் காயமடைந்தார்.
கொற்றாவத்தையைச் சேர்ந்த ப.கௌசிகன்(வயது 26) என்பவரே வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவராவார். அல்வாய் வடமேற்கைச் சேர்ந்த எம்.செந்தூரன்(வயது 26) என்ற இளைஞரே நீரில் மூழ்கி உயிரிழந்தவராவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. -