வெள்ளை வேனில் வந்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டும் வெட்டியும் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனஹேன பகுதியில்இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது 44 வயதுடைய வேபட, கோனஹேன பகுதியைச் சேர்ந்த சமன் பிரியந்த என்ற சிறு வர்த்தகரே
உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 42 வயதன அவரது நண்பர் என கருதப்படும் நபர் ராகம போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>